TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Friday, May 1, 2015

இன்று மே தினம்: தமிழகத்தில் தொழிற்சங்கம் வளர்ச்சியும் அதன் தற்போதைய நிலையும் சிறப்பு பார்வை



உலகம் முழுவதும் மே தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் தொழிற்சங்கம் வளர்ச்சியும் அதன் தற்போதைய நிலை பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சிகாகோ நகரில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் கேட்டு நடத்திய எழுச்சி நாளை தொழிலாளர்களுக்கு நினைவுபடுத்தும் நாளான இன்று மே தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் தொழிலாளர்கள் உரிமைக்காகவும், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய போதே தமிழகத்தில் எழுச்சிமிகு போராட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிலேயே மே தினம் 1923 ஆம் ஆண்டு சென்னையில் செங்கொடி ஏற்றப்பட்டது. ஏராளமான போராட்டங்களை தமிழக தொழிலாளர்கள் முன்னெடுத்ததும் இதில் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டங்கள், பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டம் போன்றவை தொழிற்சங்கம் வலுப்பெற்றதாக தெரிவிக்கிறார் சுதந்திரப்போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு.

தொழிலாளர்கள் உரிமைக்காக போராடிய தொழிற்சங்கங்கள் தற்போது தமிழகத்தில் அரசியல் கட்சி பின்னனியில் இருப்பதால் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. முன்பு நாட்டின் சுதந்திரம், தொழிலாளர்களின் உரிமை மட்டுமே இலக்காக இருந்த சூழ்நிலையில் தற்போது கட்சியின் பின்னனியில் இருப்பதால் ஒரு குடையின் கீழ் அணிதிரள பல சிரமங்கள் ஏற்படுவதாக கூறுகின்றனர் தொழிற்சங்கத்தினர்.

கட்சி பின்னனி இல்லாமல் தொழிற்சங்கம் செயல்படும் போது தொழிலாளர்கள் கோரிக்கைகள் முன்னெடுக்க முடியாமலும், இவர்களுக்கான அங்கிகாரம் மறுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

வலுவான போராட்டம், பல உயிர்த் தியாகம் செய்து வளர்ந்த தொழிற்சங்கம் இன்று கட்சிப் பின்னனியில் இருப்பதால் தொழிலாளர்கள் உரிமை போராட்டத்தில் உடனடியாக ஒன்று திரள சுணக்கம் ஏற்படுகிறது. இன்னும் தொழிலாளர்களின் உரிமை, அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவற்றை வென்றிட கட்சி வேறுபாடுகள் களைந்து தொழிலாளர்கள் என்ற ஓர் அணியில் திரளுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது

No comments: