TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, May 17, 2015

திருச்சியில் பிச்சையெடுக்க விடப்படும் வாடகை குழந்தைகள்: 7 பேர் கைது

திருச்சியில், குழந்தைகளை வாடகைக்கு எடுத்து பிச்சையெடுக்க பயன்படுத்திய 7 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், வாடகைக் குழந்தைகள் மூலம் சிலர் பிச்சையெடுத்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு பெண் காவலர்கள், சாதாரண உடையில் பேருந்து நிலையத்தை கண்காணித்தனர்.

இதில், நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த 7 பெண்கள், வாடகைக்கு எடுத்து வரப்பட்ட 4 பச்சிளம் குழந்தைகளை கொண்டு பிச்சையெடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 7 பேரையும் கைது செய்த காவல்துறையினர், திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களே, பணத்துக்காக தங்களது குழந்தைகளை பிச்சையெடுக்க வாடகைக்கு விடுவது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments: