TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, May 17, 2015

பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 8 | ஏழாம் வகுப்பு

  1. திரு.வி.க பணியாற்றியது ?
    1.  அரசு அலுவலராக
    2.  கல்லூரி பேராசிரியராக
    3.  தமிழ் ஆசிரியராக
    4.  கணித ஆசிரியராக
  2. திரு.வி.க வின் பொதுமை வேட்டல் நூலின்  மொத்தபாடல்களின் எண்ணிக்கை ? 
    1.  1250
    2.  230
    3.  335
    4.  430
  3. "பொய்யாமை அன்ன  புகழ் இல்லை எய்யாமை எல்லா அறமும்  தரும்" இக்குறளில்  'எய்யாமை' என்பதன் பொருள் என்ன ?
    1.  வருந்தாமல் 
    2.  இகழாமல்
    3.  பழிக்காமல் 
    4.  பொய் கூறாமல்
  4. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ?
    1.  520
    2.  123
    3.  203
    4.  107
  5. "தமிழ்மொழி ஒரு வெள்ளித்தட்டு , திருக்குறள் அதில்வைக்கப்பட்டுள்ள  தங்க ஆப்பிள் " என புகழ்ந்தவர் ?
    1. ஜி.யு.போப்
    2. கால்டுவெல்
    3. லேம்டன்
    4.  கிரெளல் 
  6. "கோவில் பட்டி"  என்றஊர்பெயர்  எந்த வகை நிலத்தைச்சார்ந்தது ? 
    1.  குறிஞ்சி
    2.  முல்லை 
    3.  மருதம்
    4.  நெய்தல்
  7. மதுரை -ஊரின் பெயர் கல்வெட்டுகளில்  எவ்வாறு உள்ளது ?
    1.  மதுரா
    2.  மதிலரை
    3.  மதிரை
    4. மாமதுரப்பட்டினம்
  8. புறநானூறு -சார்ந்துள்ள நூல்தொகுப்பு ?
    1.  புறநூறு 
    2.  பதினெண் கீழ்கணக்கு
    3.  பத்துப்பாட்டு
    4.  எட்டுத்தொகை 
  9. 'நோய்க்கு மருந்து  இலக்கியம்' - எனக் கூறியவர்யார்? 
    1. பாரதியார்
    2.  கண்ணதாசன்
    3. மீனாட்சி  சுந்தரம் பிள்ளை 
    4. உ.வே.சாமிநாதய்யர்
  10. 'திரிகடுகம்' என்ற நூலின் ஆசிரியர் யார் ?
    1.  ஒட்டக்கூத்தர்
    2. நக்கீரர்
    3.  நச்சினார்க்கினியர்
    4.  நல்லாதனார்

    விடை- label நம் குடும்பம் NEWS ல் காணலாம்

No comments: