TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Friday, February 10, 2017

பாகிஸ்தான் சிறையில் 74 இந்திய வீரர்கள்?

இந்தியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காணாமல் போன 74 வீரர்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக வியாழக்கிழமை அளித்த பதில்: அரசுக்கு கிடைத்த தகவலின்படி, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காணாமல் போன 74 இந்திய வீரர்கள், பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். ஆனால் அவர்கள் அங்குதான் இருக்கிறார்கள் என்பதை பாகிஸ்தான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
காணாமல் போன வீரர்களின் உறவினர்கள் பாகிஸ்தானில் உள்ள சிறைகளுக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு சென்று பார்வையிட்டுள்ளனர். எனினும் அங்கு அவர்கள் இருப்பதற்கான எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை.
ஆயினும், இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அரசிடம் மத்திய அரசு எண்ணற்ற முறை எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் சிறைகளில் இந்தியர்கள், இந்தியர்கள் என நம்பப்படும் 208 பேர் இருக்கின்றனர். அவர்களுள் 61 பேர் குற்றச்செயல்களைப் புரிந்தோர், 147 பேர் மீனவர்களாவர் என்று தனது பதிலில் வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார்