TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Tuesday, September 15, 2015

சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்

நண்பர்கள் என்றால் நல்லா பேசுவர், நம்முடன் நேரம் செலவழிப்பர்; நம்மிடமிருந்து அனைத்தையும் பகிர்ந்து கொள்வர். ஆனால், சிலர் தனக்ெகன்று ஒரு வேலையோ, வாய்ப்போ, வாழ்க்கையோ வந்து விட்டால், மிக சுயநலமாய், அப்படியே கழட்டிவிட்டுவர். சுயநலம் என்பது எவ்வளவு கொடுமை என்பது, அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.
இவர்கள், நான் உனக்கு இதைச் செய்தால், நீ எனக்கு அதைச் செய் என, ஒப்பந்தத்தை மனதுக்குள் வைத்து கொள்வர். நீ மட்டும் அதைச் செய்தால், நான் உனக்காக இதைச் செய்துவிடுவேன் என, பதிலுக்கு பதில் செய்யத்தான் கணக்கு போடுவர். நட்புகளுக்கு இடையில் மட்டுமல்ல, சொந்தங்களுக்கு, உறவுகளுக்கு இடையிலும் இப்படி நடந்துக் கொள்வோர் இருப்பர்.பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே, நாம் வாழும் வாழ்வு அர்த்தமானதாக இருக்க வேண்டும். வாழ்ந்தோம் எனும் சொல்லுக்கும், வாழ்வு எனும் சொல்லுக்கும் ஒரு சிறப்பான அர்த்தம் இருக்கிறது. ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், பலருக்கும் அர்த்தமாக, உதாரணமாக வாழ்ந்தோம் என்று, வாழ்வு இருக்க வேண்டும்.
வெற்றியாளர்களின் பின்னணிசுயநலமாய் நடப்போர் கண்கள், அவர்களின் நலம் வரைதான் கண்டுக் கொள்ளும்படி இருக்கும். அதாவது, சில மிருகங்கள் போல, ஒரு குறிப்பிட்ட தூரத்தை மட்டுமே பார்க்க முடியும். இப்படி சுயநலமாய் நடந்துக் கொள்வோர், அந்த நேரத்து வேலையை மட்டுமே கருத்தில் கொள்வர். சில ஆண்டுகளுக்கு பின், என்ன நடக்கும் என்பதை, அவர்களால் அனுமானிக்க முடியாது. இவர்கள் எப்படியென்றால், தன் நன்மையை மட்டும் நினைக்கும் சுயநலம்.இவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும், பணம் படைத்தவர்களாய் இருந்தாலும், ஆன்மிகவாதியாக இருந்தாலும் இவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கும் வாய்ப்பு குறைவுதான். வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர், ஒவ்வொருவர் பின்னணியில் எங்கேயோ அளவற்ற பொதுநலம் இருக்கும். அதற்காக, தன்னலத்தை துறந்தவர்களாய் இருக்கணும் என்று இல்லை. இவர்கள், வாழ்வின் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம்.நம்மிடமிருந்தே துவக்கம்சுயநலமாய் இருப்பது, கெட்டதா என்பது தெரியாது. ஆனால், பொதுநலமாய் இருப்பது நல்லது. உலகில் அனைவருமே சுயநலமாய் இருந்துவிட்டால் நாடு எப்படி உருப்படும்? ஆனால், நாம் நம் நிலையை உயர்த்திக் கொள்வதில், சுயநலமாய் இருப்பதில்தான் ஒரு பொதுநலமும் அடங்கியுள்ளது.
என்னங்க ஒரே குழப்பமாய் இருக்கிறதா?
ஒழுங்கா, ஒழுக்கமாக சம்பாதிச்சா நம்முடைய வீடு, மனைவி, குழந்தைகள் நன்றாக இருப்பர். நம் ஒழுக்கமும், ஒழுங்கும் நம் வீட்டிலும் பிரதிபலிக்கும். அவங்க படிக்கிற படிப்பும், பார்க்கிற வேலையும் நாட்டுக்கு பயன்படுகிற மாதிரி இருந்தால் போதும். அதுவே, பொதுநலமாக மாறிவிடும். வீடும், ஊரும், நாடும் உருப்படும். அதாவது, நம் சுயநலத்தில், பொதுநலமும் கலந்து
இருக்கணும்; அப்போ இந்த சுயநலம் தேவைதானே!
இப்போ புரியுதுங்களா?
நம் நலத்தை பேணிக்காக்காதவன், எப்படி பொதுநலம் ஆற்றமுடியும்? செயலின் முடிவு பொதுநலமாக இருந்தால் போதும். அதுவே, தன்னலத்தில் பொதுநலம் கருதும் செயலாக அமைந்துவிடும்.ஆனால், அயோக்கியத்தனமான சுயநலம் அமைந்துவிட்டால் என்ன செய்வது? யாரையும் காயப்படுத்தாத, சுரண்டாத சுயநலம் அனைவருக்கும் தேவைதான். இச்சுயநலம், ஒரு வகையில் கடமையும், பொறுப்பும் ஆகும். எந்தச் செயலும், நம்மிடமிருந்தே தான் துவங்க வேண்டும்; ஆனால், செயலின் முடிவு, பொதுநலமாக இருந்தால் போதும்.’மழை பெய்யணும்னு நினைக்கிறது பொதுநலம் நாம் நனையாம குடை பிடிச்சிக்கிறது சுயநலம்’ சிந்தனையில், பொதுநலம் இருந்தாலே போதும். சின்ன சின்ன செயல்கள் நூறு செய்யலாம். பொது இடங்களை சுத்தமாக வைத்து கொள்வதும், பொது இடங்களில் புகை பிடிக்காமல் இருப்பதும், தண்ணீர், மின்சாரத்தை சேமிப்பது என்று துவங்கி, பலவற்றை பட்டியல் போடலாம். பொதுநல சிந்தனையுடன், என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யாமல் இருக்கலாம் என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். பொதுநல சிந்தனை மனதில் பூக்க இடமளித்தாலே போதும், உங்கள் அறிவு பொதுநல நோக்கில்
என்ன செய்யலாம் என்று, வழிக்காட்டத் துவங்கும்.
பொதுநல சிந்தனையோடு… யார் யாரோ கண்டுபிடித்த பொருட்களையும் பயன்படுத்தி வருகிறோம். யார், யாரோ அமைத்து கொடுத்த, அடிப்படை வசதிகளை அனுபவித்து வருகிறோம். ஆனால், அதே சிந்தனையோடு, அடுத்த தலைமுறைக்காகவும், சக மனிதனுக்காகவும், நாம் செயல்பட தயங்குவதென்பது அநியாயம் தானே?
பெரிய அரசியல் தலைவர்கள், ஞானிகள் போன்றோரால் மட்டும் தான், பொதுநலத்துடன் சிந்திக்க முடியும் என்றும், மற்றபடி சராசரி மனிதர்களுக்கு அதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும் எனவும், நம்மில் பலர் நினைக்கிறோம்.
யாருக்கும் எந்த கெடுதல் நினைக்காமலும், செய்யாமலும் என் குடும்பத்தில், எனக்கு இருக்கும் கடமைகளை, எந்தக் குறையும் வைக்காமல் நிறைவேற்றினாலே போதாதா? என்று, ஒரு கேள்வியை கேட்டு, ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே நின்றுக் கொள்கின்றனர். இன்றைக்கும் பொதுநல சிந்தனையோட, ஈர இதயங்கள் ஆங்காங்கே பலர் இருப்பதால்தான், இந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அன்ன தானம். ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் வரை நடந்துக் கொண்டேயிருக்கிறது.
நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை நமக்கு…
மற்றும் நான் ஏன் பிறந்தேன்… இந்த நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்? இந்த முழு பாடல்களின் அர்த்தம் புரிந்தால் போதும்,நாமும் பொதுநலம் பார்த்து நடக்க ஆரம்பித்து விடுவோம்.

No comments: