TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, September 13, 2015

ரத்தக்கொதிப்பா…? முளைக்கீரை நல்லது

உணவுக்கு அதிகம் பயன்படும் கீரைகளில், முளைக்கீரை முக்கியமானதாகும். அதிக மருத்துவ குணம் கொண்டது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தாராளமாக இக்கீரை கிடைக்கும்.
முளைக்கீரையை விதைத்த, 45 நாட்களில் அறுவடை செய்து விட வேண்டும். முளைக்கீரை உணவுக்கு நல்லது. அதற்கு மேல் வளர்ந்தால் கீரை முதிர்ந்து தண்டு, நார் பாய்ந்துவிடும்.
முளைக்கீரையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக, சுண்ணாம்புச்சத்து நிறைய இருக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இக்கீரையை தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். முளைக்கீரையை பருப்புடன் நன்கு வேக வைத்து, மசித்து, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
முளைக்கீரை உணவுக்குச் சுவையூட்டுவதுடன், பசியையும் தூண்டும். முளைக்கீரையை நன்கு கழுவி சிறிது வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்து, கடைந்து, உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் சூடு, ரத்தக்கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும்.
முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிரங்கு முதலிய குணமாகும். இந்த கீரை வெப்ப சுரத்தைத் தணிக்கும்.

No comments: