சென்னை: தமிழகத்தில் கைவினைஞர்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கைவினைஞர்கள் தின விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைவினைஞர்கள் குறித்து பேசினார். அதில் ''கைவினைப்பொருள்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும். அதேபோல் தமிழகத்தில் இருக்கும் கைவினைஞர்களின் திறன் பயிற்சிகளின் மூலம் மேம்படுத்தப்படும்'' என்று குறிப்பிட்டார். மேலும் ''சிங்கப்பூர், மலேசியா, ஆஸி.க்கு தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். பூம்புகாரில் இருக்கும் உற்பத்தி மையங்களில் இருந்து இந்த ஏற்றுமதி நடைபெறும்'' என்றார். மேலும் ''தமிழகத்தில் வருடா வருடம் 247 கைவினைஞர்களில் 7 பேருக்கு சிறந்த விருது வழங்கபடுகிறது. இதில் எப்போதும் தமிழகம் முதல் இடம் வகித்து வருகிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Labels
TRB,TNTET,TNPSC online coching
Search This Blog
NEWS
https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.
Thursday, March 8, 2018
கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, ஐகோர்ட் தலைமை நீதிபதி கடும் கண்டனம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (36). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் உஷா கர்ப்பம் அடைந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ராஜா தனது மனைவியை திருச்சியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
அவர்கள் இரவு 7 மணியளவில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ராஜாவின் வாகனத்தை மறித்து ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவசரத்தில் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
ஆனால் அவரை மற்றொரு போலீஸ்காரருடன் துரத்தி சென்ற இன்ஸ்பெக்டர் காமராஜ், பெல் கணேசா ரவுண்டானா அருகே ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறிய ராஜா நடுரோட்டில் மனைவியுடன் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் உஷா மீது மோதியது. இதில் உஷாவுக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் ரத்தப்போக்கும் அதிகமாகி நடுரோட்டில் உயிருக்கு போராடினார். காதிலிருந்தும் ரத்தம் வழிந்தது. உடனடியாக ராஜா மற்றும் உஷாவை 108 ஆம்புலன்சு மூலம் துவாக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உஷா பரிதாபமாக இறந்தார்.
அனைவரையும் அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஆயிரகணக்கானவர்கள் கூடி சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்றும் முடியவில்லை.
எனவே போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தடியடியில் 50-க்கும் மேற்பட்டோர் மண்டை உடைந்து காயம் அடைந்தனர். மேலும் போலீஸ் ஜீப் உள்பட 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. வாகனங்களை சேதப்படுத்தியதாக சிலரை போலீசார் பிடித்து சென்றனர். 15 பேர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த போராட்டம் பின்னர் சிறிது சிறிதாக விலக்கி கொள்ளப்பட்டது.
இதற்கிடையே கர்ப்பிணி பெண் உஷாவின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருவெறும்பூரில் பெண் உஷா உயிரிழப்பு சம்பவம் பற்றி நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அப்போது கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். போலீஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது, சட்டவிரோதமான செயல். திருவெறும்பூர் சம்பவம் கிரிமினல் குற்றத்துக்கு சமமானது என கூறி உள்ளார்
9.5 டன் எடை.. 2 வாரத்தில் பூமியை தாக்கும்.. மிரள வைக்கும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன்!
பெய்ஜிங்: சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனான டியாங்கோங்-1 பூமியின் மீது இன்னும் இரண்டு வாரங்களில் மோத இருக்கிறது என அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. சீனா அனுப்பிய முதல் ஸ்பேஸ் ஸ்டேஷன் இதுதான் என்று கூறப்பட்டு இருக்கிறது. இது விண்வெளியில் நிரந்தரமாக ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் சில மாதங்களுக்கு முன் சீனாவின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணமோ, ஏன் வேலை செய்யவில்லை என்றோ இன்னும் கண்டுபிக்கப்படவில்லை. பெரிது ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பெரிய அளவில் இந்த ஆராய்ச்சி நிலையம் இருந்தது. இதன் பெயரின் அர்த்தம் ''சொர்கத்தில் ஒரு பேலஸ்'' என்பதாகும். தனது கட்டுப்பாட்டை இழந்துள்ள இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை எவ்வளவு முயன்றும் நிறுத்த முடியவில்லை. இதன் எடை 9.5 டன் ஆகும். எப்போது சில மாதங்களுக்கு முன்பு இது மார்ச், இல்லை ஏப்ரல் மாதங்களில் விழும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது சரியான தேதி கூறப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 23ல் இருந்து ஏப்ரல் 9ம் தேதிக்குள் எதோ ஒரு நாளில் கண்டிப்பாக இது பூமியை தாக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. எந்த பகுதி இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் பிரான்ஸ், கிரிஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, சீனாவில் சில பகுதி ஆகிய இடங்களில் மாறி மாறி விழ வாய்ப்பு இருக்கிறது. அப்போதைய காலநிலையும், ஸ்பேஸ் ஸ்டேஷன் விழும் வேகத்தையும் பொறுத்தும் இது மாறுபடுகிறது. எவ்வளவு இதன் எடை 9.5 டன் ஆக இருந்தாலும் , மொத்தமாக அப்படியே பூமியில் விழுவது சந்தேகம்தான். ஏனென்றால் பூமியின் சுற்றுசுழலுக்குள் நுழைந்ததும் பாதி பகுதி சாம்பலாகிவிடும். இதனால் 500 பவுண்ட் வரை கண்டிப்பாக பூமியில் விழும், ஆனால் அதுவும் மனிதர்களை தாக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது
Subscribe to:
Posts (Atom)