இணையத்தினைப் பயன்படுத்துபவர்களில், சமூகத் தொடர்பினைத் தரும் இணைய தளங்களைப் பயன்படுத்துவதில், கிராமப் புறங்களில் உள்ளவர்கள் எண்ணிக்கை, நகர்ப்புறங்களில் புதிதாக இணைப்புக் கொள்பவர்களைக் காட்டிலும் சென்ற ஆண்டு அதிகமாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 2014 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 35% கிராமப் புறங்களில் உயர்ந்ததாகத் தெரிய வந்துள்ளது. IMRB International and Internet and industry body Mobile Association of India (IMAI) இதனை அறிவித்துள்ளது.
சமூக இணையத் தளங்களைப் பயன்படுத்தும் 14.3 கோடி (ஏப்ரல் 2015 வரை) பேர்களில், 11.8 கோடி பேர் நகரங்களில் வாழ்பவர்கள். 2.5 கோடி பேர் கிராமங்களிலிருந்து இயங்குபவர்கள். சென்ற ஜூன் 2014 வரை, கிராமப் புறங்களில் இருந்து சமூக தளங்களைப்
சமூக இணையத் தளங்களைப் பயன்படுத்தும் 14.3 கோடி (ஏப்ரல் 2015 வரை) பேர்களில், 11.8 கோடி பேர் நகரங்களில் வாழ்பவர்கள். 2.5 கோடி பேர் கிராமங்களிலிருந்து இயங்குபவர்கள். சென்ற ஜூன் 2014 வரை, கிராமப் புறங்களில் இருந்து சமூக தளங்களைப்
பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 33% உயர்ந்துள்ளது. நகரங்களில் இந்த வளர்ச்சி 28% மட்டுமே. இந்தக் கணிப்பு ஏழு மாநிலங்களில், 35 இடங்களில் வாழ்பவர்களிடம் எடுக்கப்பட்டது. ஏப்ரல் 2015ன் படி, 25.7 கோடி இணையப் பயனாளர்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் 18 கோடி பேர் நகரங்களிலும் 7.7 கோடி பேர் கிராமங்களிலும் வாழ்கின்றனர். கிராமப் புறங்களில் உள்ளவர்களின் சமூக தளப் பயன்பாடு உயர்வதற்கு, இத்தளங்களின் பல்வேறு வசதிகள் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்துவதில் உள்ள இணக்கமான தொழில் நுட்ப சூழ்நிலைகளே காரணமாகும்.
புது டில்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா உட்பட இந்தியாவின் 35 நகரங்களில் உள்ள இணையப் பயனாளர்களில் 84% பேர் இணையத்தை, பெரும்பாலும் சமூக நட்பிற்கென இயங்கும் தளங்களைப் பார்ப்பதற்கே பயன்படுத்துகின்றனர். கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை 85% ஆக உள்ளது.
நகர்ப்புறங்களில் சமூக தளங்களைப் பயன்படுத்துவர்களில், ஏறத்தாழ பாதிக்கு மேலானவர்கள் நான்கு மாநகரங்களிலேயே உள்ளனர். இந்த நான்கு பெரும் நகரங்களுக்கு அடுத்தபடியான, 35 சிறிய நகரங்களில் உள்ளவர்களில் 5% பேர் சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆய்வில், சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துவதில் கல்லூரி மாணவர்களே அதிக இடம் (34%) பெற்றுள்ளனர். அடுத்தபடியாக, 21 வயதிலிருந்து 35 வயதுள்ள இளைஞர்கள் அடுத்த இடம் பெறுகின்றனர்.
இதில் கண்டறியப்பட்ட இன்னொரு முக்கிய ஆர்வமூட்டும் விஷய்ம், சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மொபைல் போன்கள் வழியாகவே சமூக இணைய தளங்களைத் தொடர்பு கொள்கின்றனர். தற்போது ஸ்மார்ட் போன்களின் விலை படிப்படியாகக் குறைந்து, அதிகமாக விற்பனையாவதால், மொபைல் போன் வழி பயன்பாடு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே கண்டறியப்பட்ட தகவல்களால், சமூக இணைய தளங்களை இயக்கும் நிறுவனங்கள், அவற்றின் இயக்கத்தில், கூடுதலாக முதலீடு செய்து வருகின்றன. தொடக்கம் முதல் இன்று வரை, இந்த சமூக இணைய தளப் பயன்பாட்டில், பேஸ்புக் இணைய தளமே முதல் இடம்
பெறுகிறது.
மொத்தத்தில் 96% பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதனை அடுத்து கூகுள் ப்ளஸ் பயன்படுத்துபவர்கள் 61% ஆக உள்ளனர். ட்விட்டர் தளத்தினை 43% பேரும், லிங்க்ட் இன் தளத்தினை 24% பேரும் பயன்படுத்தி வருகின்றனர். மொத்த சமூக தளப் பயன்பாட்டாளர்களில், 18% பேர் மட்டுமே இணையத்தினைத் தங்கள் அலுவலகத்திலிருந்து பயன்படுத்துகின்றனர். அடுத்த 18% பேர் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளட் பி.சி. வழியாகப் பயன்படுத்துகின்றனர். ஏறத்தாழ 75% பேர், தங்கள் வீடுகளிலிருந்து தான், இந்த தளங்களை அணுகுகின்றனர். இந்த ஆய்வு 2013 டிசம்பர் மாதத்திற்குப் பிந்தைய காலத்தில் எடுக்கப்பட்டது.
புது டில்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா உட்பட இந்தியாவின் 35 நகரங்களில் உள்ள இணையப் பயனாளர்களில் 84% பேர் இணையத்தை, பெரும்பாலும் சமூக நட்பிற்கென இயங்கும் தளங்களைப் பார்ப்பதற்கே பயன்படுத்துகின்றனர். கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை 85% ஆக உள்ளது.
நகர்ப்புறங்களில் சமூக தளங்களைப் பயன்படுத்துவர்களில், ஏறத்தாழ பாதிக்கு மேலானவர்கள் நான்கு மாநகரங்களிலேயே உள்ளனர். இந்த நான்கு பெரும் நகரங்களுக்கு அடுத்தபடியான, 35 சிறிய நகரங்களில் உள்ளவர்களில் 5% பேர் சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆய்வில், சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துவதில் கல்லூரி மாணவர்களே அதிக இடம் (34%) பெற்றுள்ளனர். அடுத்தபடியாக, 21 வயதிலிருந்து 35 வயதுள்ள இளைஞர்கள் அடுத்த இடம் பெறுகின்றனர்.
இதில் கண்டறியப்பட்ட இன்னொரு முக்கிய ஆர்வமூட்டும் விஷய்ம், சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மொபைல் போன்கள் வழியாகவே சமூக இணைய தளங்களைத் தொடர்பு கொள்கின்றனர். தற்போது ஸ்மார்ட் போன்களின் விலை படிப்படியாகக் குறைந்து, அதிகமாக விற்பனையாவதால், மொபைல் போன் வழி பயன்பாடு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே கண்டறியப்பட்ட தகவல்களால், சமூக இணைய தளங்களை இயக்கும் நிறுவனங்கள், அவற்றின் இயக்கத்தில், கூடுதலாக முதலீடு செய்து வருகின்றன. தொடக்கம் முதல் இன்று வரை, இந்த சமூக இணைய தளப் பயன்பாட்டில், பேஸ்புக் இணைய தளமே முதல் இடம்
பெறுகிறது.
மொத்தத்தில் 96% பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதனை அடுத்து கூகுள் ப்ளஸ் பயன்படுத்துபவர்கள் 61% ஆக உள்ளனர். ட்விட்டர் தளத்தினை 43% பேரும், லிங்க்ட் இன் தளத்தினை 24% பேரும் பயன்படுத்தி வருகின்றனர். மொத்த சமூக தளப் பயன்பாட்டாளர்களில், 18% பேர் மட்டுமே இணையத்தினைத் தங்கள் அலுவலகத்திலிருந்து பயன்படுத்துகின்றனர். அடுத்த 18% பேர் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளட் பி.சி. வழியாகப் பயன்படுத்துகின்றனர். ஏறத்தாழ 75% பேர், தங்கள் வீடுகளிலிருந்து தான், இந்த தளங்களை அணுகுகின்றனர். இந்த ஆய்வு 2013 டிசம்பர் மாதத்திற்குப் பிந்தைய காலத்தில் எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment