TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Sunday, January 4, 2015

ஓ.பி.சி., வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்
துறையின் நிதி உதவியுடன் கூடிய இத்திட்டத்தை, 2014 - 15ம் கல்வியாண்டு முதல், யு.ஜி.சி., அறிமுகப்படுத்துகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேலையில்லாத பட்டதாரி கள், குறிப்பாக, அறிவியல், சமூக அறிவியல், கலையியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு களில் முழுநேர, பகுதி நேர, எம்.பில்., - பி.எச்டி., ஆய்வு படிப்பு களில் சேர்ந்தவர்களுக்கு, இந்த உதவித் தொகை வழங்கப்படும். இணையம் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களில், 300 பேருக்கு மட்டும், இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இத்தகவல்களை, யு.ஜி.சி., செயலர், ஜஸ்பால் சாந்து தெரிவித்து உள்ளார்.

No comments: