TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Thursday, March 8, 2018

கைவினைஞர்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும்.. கலைவாணர் அரங்கங்கத்தில் முதல்வர் பழனிச்சாமி பேச்சு

சென்னை: தமிழகத்தில் கைவினைஞர்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கைவினைஞர்கள் தின விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைவினைஞர்கள் குறித்து பேசினார். அதில் ''கைவினைப்பொருள்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும். அதேபோல் தமிழகத்தில் இருக்கும் கைவினைஞர்களின் திறன் பயிற்சிகளின் மூலம் மேம்படுத்தப்படும்'' என்று குறிப்பிட்டார். மேலும் ''சிங்கப்பூர், மலேசியா, ஆஸி.க்கு தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். பூம்புகாரில் இருக்கும் உற்பத்தி மையங்களில் இருந்து இந்த ஏற்றுமதி நடைபெறும்'' என்றார். மேலும் ''தமிழகத்தில் வருடா வருடம் 247 கைவினைஞர்களில் 7 பேருக்கு சிறந்த விருது வழங்கபடுகிறது. இதில் எப்போதும் தமிழகம் முதல் இடம் வகித்து வருகிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

No comments: